Wednesday, September 23, 2015

18.08.209  இன்று பகல் 11.30 மணிக்கு தாய்த் தமிழ் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக காலணி வழங்கும் விழாவும் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி அறங்காவலர் பேராசிரியர் கே.வி.ஜி அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செ.விஸ்வதாஸ் வரவேற்றார். 

சென்னை, அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் சா. குப்புராஜ் அவர்கள் தனது தாயார் திருமதி சா.கல்யாணி அவர்களின் நினைவாக 181 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 17 பேர் என மொத்தம் 198 பேருக்கு காலணிகளை இலவசமாக வழங்கினார். விலங்கினங்களைப் துன்புறுத்துக் கூடாது, அவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் விலங்கினங்களின் தோலில் செய்யாமல் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ 50,000 மதிப்பிலான 190 ஜோடி  காலணிகளை வழங்கினார். 

காலணிகளை சென்னையிலுள்ள Sole Foundation என்கிற நிறுவனத்தை நடத்துகின்ற திருமிகு. அர்சீன் மூசா என்பவர் கைவினை கலைஞர்களை வைத்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் மு.பூபால், அறங்காவலர்கள் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தி.அ.நசீர் அகமது, இரா.முருகப்பன், கோ.வடிவேல், அம்பேத்கர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மோ.மணி மற்றும் பெற்றோர்கள் 40 பேர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார். 






No comments:

Post a Comment