Wednesday, September 23, 2015

மாணவர்களுக்கு - டெங்கு காய்ச்சலை தடுக்க - நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியில்
நகர மன்றத் தலைவர் கே.வி.என் நிலவேம்பு கசாயம் வழங்கினார்

திண்டிவனம் உரோசனையில் உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளியில் இன்று 23.09.2015 மாலை 3.00 மணியளவில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுப்புதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் உள்ளிட்ட கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல்களை தடுப்பதற்கான மருந்தாக நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் திண்டிவனம் நகர மன்றத் தலைவர் திரு.கே.வி.என்.வெங்கடேசன் அவர்கள் நிலவேம்பு கசாயத்தினை வழங்கினார். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் திரு.வேணுகோபால், திரு.சுதாகரன், பெ.ஆ.க. தலைவர் செ.விஸ்வதாஸ்,  தலைவர் பிரபா.கல்விமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். தாளாளர் மு.பூபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் தலைமை ஆசிரியர் எஸ்.ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி பொருளாளர் முருகப்பன் நன்றி கூறினார்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான இம்முகாம் மூன்றாம் ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். தடுப்பு மருந்தினை திருச்சி மூலிகை மருத்துவர் திரு.திருஞானம் அவர்கள் தயாரித்ததாகும். அவர் வழிகாட்டுதல் படி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விளாம்மிச்சம் வேர், கோரைக்கிழங்கு, பற்படாக, சந்தனம், விஷ்ணுகிராந்தி, பேய்புடல் ஆகிய 10 மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டதாகும்.








18.08.209  இன்று பகல் 11.30 மணிக்கு தாய்த் தமிழ் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக காலணி வழங்கும் விழாவும் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி அறங்காவலர் பேராசிரியர் கே.வி.ஜி அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செ.விஸ்வதாஸ் வரவேற்றார். 

சென்னை, அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் சா. குப்புராஜ் அவர்கள் தனது தாயார் திருமதி சா.கல்யாணி அவர்களின் நினைவாக 181 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 17 பேர் என மொத்தம் 198 பேருக்கு காலணிகளை இலவசமாக வழங்கினார். விலங்கினங்களைப் துன்புறுத்துக் கூடாது, அவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் விலங்கினங்களின் தோலில் செய்யாமல் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ 50,000 மதிப்பிலான 190 ஜோடி  காலணிகளை வழங்கினார். 

காலணிகளை சென்னையிலுள்ள Sole Foundation என்கிற நிறுவனத்தை நடத்துகின்ற திருமிகு. அர்சீன் மூசா என்பவர் கைவினை கலைஞர்களை வைத்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் மு.பூபால், அறங்காவலர்கள் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தி.அ.நசீர் அகமது, இரா.முருகப்பன், கோ.வடிவேல், அம்பேத்கர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மோ.மணி மற்றும் பெற்றோர்கள் 40 பேர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார்.