டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியில்
நகர மன்றத் தலைவர் கே.வி.என் நிலவேம்பு கசாயம் வழங்கினார்
திண்டிவனம் உரோசனையில்
உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளியில் இன்று 23.09.2015 மாலை 3.00 மணியளவில் டெங்கு
உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுப்புதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் டெங்கு
மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் உள்ளிட்ட கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல்களை தடுப்பதற்கான
மருந்தாக நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும் திண்டிவனம் நகர மன்றத் தலைவர் திரு.கே.வி.என்.வெங்கடேசன் அவர்கள் நிலவேம்பு
கசாயத்தினை வழங்கினார். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் திரு.வேணுகோபால், திரு.சுதாகரன்,
பெ.ஆ.க. தலைவர் செ.விஸ்வதாஸ், தலைவர் பிரபா.கல்விமணி
ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். தாளாளர் மு.பூபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்
தலைமை ஆசிரியர் எஸ்.ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி பொருளாளர் முருகப்பன்
நன்றி கூறினார்.
டெங்கு காய்ச்சலை
தடுப்பதற்கான இம்முகாம் மூன்றாம் ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். தடுப்பு
மருந்தினை திருச்சி மூலிகை மருத்துவர் திரு.திருஞானம் அவர்கள் தயாரித்ததாகும். அவர்
வழிகாட்டுதல் படி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் நிலவேம்பு,
சுக்கு, மிளகு, வெட்டிவேர், விளாம்மிச்சம் வேர், கோரைக்கிழங்கு, பற்படாக, சந்தனம்,
விஷ்ணுகிராந்தி, பேய்புடல் ஆகிய 10 மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டதாகும்.
No comments:
Post a Comment