Tuesday, November 8, 2011

வண்டிக்காரக் காவலர்

வண்டிக்காரக் காவலர்

பெருமாள் பெத்தபுள்ள


பேரெடுத்து வளர்ந்த புள்ள


நீ பெத்தது நாலு புள்ள.


ரெண்ட கரசேத்த.


ரெண்ட கரசேக்காம


நீ


கரதேடி போயிட்டியே.


அதிகாலையில


வண்டி பூட்டி.. போயி வந்து..


களைப்பார மாட்ட கட்டி


உடனே பள்ளிக்கு நீ வந்து


உன் பாதத்தை பதிச்சுடுவ..


பள்ளிக் குப்பைகளை


நீ வந்து கூட்டிடுவ


அடுத்த வேல இன்னானு


எடுத்துக் கட்டி செஞ்சிடுவ

சுட்டெரிக்கும் வெயிலும்


நீ சட்டத் துணி போட்டதில்ல


நீ இருக்கும்போது


எந்த பொருள் கேட்டாலும்


இங்க இருக்கு


அங்க இருக்குன்னு


எடுத்து வந்து தந்திடுவ!


இப்போ


எந்தப் பொருள்


எங்க இருக்கு


எங்களுக்கு தெரியலையே!


யார் எந்த வேலையை


எப்படிச் சொன்னாலும்


மறுக்காம செஞ்சிடுவ!


யார் என்ன சொன்னாலும்


மனசுக்குள்ள வச்சிகிட்டு


முகம் சுளிக்காம


நடந்துக்குவ!

நீ


தண்ணி ஊத்தி


வளர்த்த மரம்


பள்ளியெல்லாம்


தளதளன்னு நிக்குதய்யா!

எங்க


நெஞ்சமெல்லாம்


உன் நினைப்பு


தினம்


வந்து வந்து நிக்குதய்யா!


கவிதை ஆக்கம்.

-கா.வ.கன்னியப்பன்,
ஆசிரியர்,

தாய்த் தமிழ்ப் பள்ளி

No comments:

Post a Comment